திருப்பூர் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் 3-வது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே காமராஜர் சாலையில் நீட் தேர்வு பயிற்சி மையம் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது.
இந்தப் பயிற்சி மையத்தில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் படியூர் என்ற பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகள் ஆனந்தி என்ற பெண் பயின்று வருகிறார்.
இந்நிலையில், இந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தப் பெண்ணைக் காண அவரது காதலன் பயிற்சி மையத்துக்கு நேற்று வந்துள்ளார்.
அதே நேரத்தில் அந்த பெண்ணின் தந்தை மணிகண்டன் அங்கு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரின் காதல் கதை அந்தப்பெண்ணின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து தந்தையான மணிகண்டன் அவரது மகளை கடிந்துகொண்டார்.
இதனால், மனம் கலங்கிய ஆனந்தி பயிற்சி வகுப்பு கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியே குதித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘சபாஷ்’ உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பல்கலைக்கழக மானிய குழு! ஏன் தெரியுமா?