நடிகை ஹன்சிகா மோத்வானி விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகால் சின்ன குஷ்பூ என கொண்டாடப்பட்ட நடிகைதான், ஹன்சிகா மோத்வானி. விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக இவர் விளங்கி வந்தார்.
தற்போது, ஹன்சிகா மோத்வானி தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவரின் நடிப்பில் வெளிவந்த எந்தி திரைப்படமும் ரசிகர்களிடத்தில் பெரிய ஆதரவை பெறவில்லை. இனி இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறுமென்ற நம்பிக்கையில் ஹன்சிகா உள்ளார்.
இந்நிலையில்தான், தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாகவும் இத்திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து எந்தவித தகவலும் ஹன்சிகா தரப்பிலிருந்து வெளிவராமல் இருந்தது.
View this post on Instagram
ஆனால், தற்போது வெளிவந்த தகவல்களை உறுதிசெய்யும் விதமாக ஹன்சிகா தன் வருங்கால கணவரை அறிமுகப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அப்பதிவில் ‘இன்றும், என்றென்றும்’ என்று பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் சோகேல் ஹன்சிகாவிற்கு காதலை தெரிவிப்பதாகவும், அவர் அந்த காதலை ஏற்பதாகவும் உள்ளது.
இதையும் படிங்க: ‘சபாஷ்’ உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பல்கலைக்கழக மானிய குழு! ஏன் தெரியுமா?