சென்னையில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால், கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் மனைவி பெயர் சாந்தி. இந்நிலையில், இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மகாலட்சுமி வயது 19. இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆனால்சின் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். மேலும் துகில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டி இழந்தார். இந்தத் தகவலை அறிந்த அவரது குடும்பம் திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி, நேற்று காலை வீட்டில் இருக்கும் அறையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து, முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இராவண கோட்டம் படத்தின் டிரைலர் எப்போது? – வெளிவந்த அப்டேட்..