Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வசூலில் 'பத்து தல' சாதித்ததா? - வெளிவந்த தகவல்..

    வசூலில் ‘பத்து தல’ சாதித்ததா? – வெளிவந்த தகவல்..

    மூன்று நாள் முடிவில் நடிகர் சிலம்பரசனின் ‘பத்து தல’ திரைப்படம் ரூ.20 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான், ‘பத்துதல’. கன்னட மொழியில் வெளிவந்து பெரியளவில் ஹிட் அடித்த ‘மஃப்டி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்தான், பத்து தல. 

    நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக், டீஜே, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மூன்று நாள் முடிவில் ‘பத்து தல’ திரைப்படம் ரூ.20 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, பத்து தல திரைப்படம் முதல் நாள் அன்று மட்டும் ரூ.12.3 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    பப்புவா நியூ கினியா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....