பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 4 மணிக்கு 7.0 அளவிலான ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ளது, பப்புவா நியூ கினியா தீவு. இந்த தீவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது. மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும், பப்புவா நியூ கினியா தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்படும் மண்டத்தில் உள்ள ஒன்றாகும். ஆனால் இந்த தீவில் மக்கள் தொகை குறைவு என்பதால் பாதிப்பு ஏதும் அதிக அளவு உணரப்படவில்லை.
இராவண கோட்டம் படத்தின் டிரைலர் எப்போது? – வெளிவந்த அப்டேட்..