வரும் சனிக்கிழமை 19/11/2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் வேலை நாள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும் , அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்திருந்தது.
அதன்படி வரும் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட உள்ளது.
இதையும் படிங்க: 80 ஆயிரம் பேருக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வு: மத்திய ரயில்வே துறை அறிவிப்பு