காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
தொழிலதிபரும் சேலம் ராமசாமி உடையாரின் மகன் தேவதாஸ். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளராக பதவி வகித்தவர் ஆவார். தேவதாஸ் முன்னாள் சேலம் மக்களவை தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து கொண்டார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்துள்ள தேவதாஸ் தற்போது கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான கடிதத்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்கத்தின் செயலாளருமான கார்த்தி உடன் இருந்தார்.
இதனிடையே, திருத்தணி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோ.ரவிராஜ் இன்று தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்வின்போது, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி உடன் இருந்தார்.