Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தேவதாஸ்..

    பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தேவதாஸ்..

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். 

    தொழிலதிபரும் சேலம் ராமசாமி உடையாரின் மகன் தேவதாஸ். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளராக பதவி வகித்தவர் ஆவார். தேவதாஸ் முன்னாள் சேலம் மக்களவை தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

    இந்நிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து கொண்டார். 

    மேலும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்துள்ள தேவதாஸ் தற்போது கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான கடிதத்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வழங்கினார். 

    இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்கத்தின் செயலாளருமான கார்த்தி உடன் இருந்தார். 

    devadoss joined pmk

    இதனிடையே, திருத்தணி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோ.ரவிராஜ் இன்று தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்வின்போது, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி உடன் இருந்தார்.

    raviraj joined pmk

    நகர் ஊரமைப்பு இயக்கத்தில் 27 உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை; வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....