Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாமக்கலில் பட்டாசு விபத்து; 4 பேர் உடல் கருகி பலி

    நாமக்கலில் பட்டாசு விபத்து; 4 பேர் உடல் கருகி பலி

    நாமக்கலில் பட்டாசு கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 4 பேர் உடல் கருகி பலியாகினர். 

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தில்லைக்குமார். இவருக்கு வயது 40. இந்நிலையில் இவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக அதிக அளவிலான பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தார். 

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பட்டாசும், கேஸ் சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால், வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தில்லைகுமார், இவரின் தாய் செல்வி மற்றும் அவரது மனைவியும் பக்கத்து வீட்டில் இருந்து பெரியாக்காள் என்ற மூதாட்டியும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். 

    இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக சேலம் சரக காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    புத்தாண்டை முன்னிட்டு கடற்கரை சாலைகளில் அனுமதி இல்லை – காவல்துறை உத்தரவு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....