தமிழகத்தில் 41 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் 152.20 கோடி லட்சம் ரூபாய் செலவில் அரசு கலை மற்றும் அறவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தனியாக ஒரு அரசு கல்லூரி என்ற போது அதற்கான சுய நிதிதிரட்டல், நிதிநிலையை சீராக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.
அப்படி மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தோற்றுவித்தும், அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனைப் பின்பற்றி, வரும் காலங்களில் இந்த அரசாணைகளை முழுமையாக செயல்படுத்துவதற்கான ஒரு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் இப்படியொரு வேலையா.. மக்களே ரெடியா?