துருக்கியில் கிரேக்க எல்லைப் பகுதியில் அமைத்துள்ள கிராமத்தில் அத்தி மரம் ஒன்று வளர்ந்துள்ளது. இந்நிலையில், அதுபோன்ற அத்திமரம் அங்குள்ள பகுதியில் இல்லாத காரணததால், சந்தகேம் எழுந்துள்ளது. எங்கும் காணாத இந்த மரம் இங்கு மட்டும் எப்படி வளர்ந்தது என்ற கேள்வி எழ, ஆய்வாளர்கள் இதனைச் சோதனை செய்து பார்த்தனர்.
அந்தவகையில், சோதனையின் ஒரு பகுதியாக அத்தி மரத்தின் அடியில் சோதனை நடத்தினர். அப்போது தான் ஒரு அதிர்ச்சியான சம்பவம் காத்துக்கொண்டிருந்தது. அந்த மரத்தின் அடியில் ஒரு மனிதனின் சடலத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த சலடலத்தின் வயிற்றில் இருந்தே அத்திமரம் முளைத்தது தெரியவந்தது.
மிகவும் மோசமான நிலையில் இருந்த சலடலத்தை ஆய்வாளர்கள் காவல்துறையின் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, அவரின் மரபணுக்களை வைத்து சோதனை நடத்திய போது, அந்த நபர் துருக்கி பழங்குடியினத்தை சேர்ந்த அகமது அர்க்யூன் என்பதும் தெரியவந்தது.
அகமது அர்க்யூன் என்ற அந்த நபர், 1974 ஆம் ஆண்டு திடீரென கண் காணாமல் சென்றுள்ளார். அந்த காலக் கட்டத்தில் துருக்கி எல்லையில் இரு பழங்குடியின மக்களிடையே யுத்தம் நடைபெற்றது. அதில், ஒரு தரப்பில் அகமது அர்க்யூன் இணைத்து செயல்பட்டு வந்தார். அப்போது எதிரிகளின் பிடியில் இவர் சிக்கியிருக்கலாம். அவர்கள் இவரை இந்த இடத்தில் கொலை செய்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஓசோன் ஓட்டையை அடைக்க தயாராகும் விஞ்ஞானிகள்! அடுத்த 50 ஆண்டுகளில் சாதனை நிகழுமா?
மேலும், கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர், அத்திப்பழத்தை சாப்பிட்டிருக்கலாம். அந்த அத்தி பழத்தின் விதைதான் அவரது வயிற்றில் இருந்து மரமாக வளர்ந்திருக்கலாம் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஒரு மனிதன் சாப்பிட்ட பழத்தின் விதை அவர், இறந்த பின்பும் அவரது வயிற்றிலிருந்து வளர்ந்தது ஆச்சர்ய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.