அடுத்த 50 ஆண்டுகளுக்குள் ஓசோன் அடுக்கில் ஏற்பட்டுள்ள ஓட்டை முற்றிலுமாக அடைக்கப்படும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகத்தை சூரிய கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் மண்டலம் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்பட பிற கரியமில வாயுக்கள் வெளியீடு காரணமாக சேதம் அடைந்தது. அதனுள் ஓட்டை விழுந்ததாகவும், ஆய்வாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், பிற்காலத்தில் அதன் தேவையை உணர்ந்து ஓசோனை பாத்துக்க பல்வேறு வழிமுறைகளை அறிவித்தனர். நாம் இதை பள்ளி பருவத்திலேயே அறிந்திருப்போம்.
இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஓசோனில் உள்ள ஓட்டையை அடைப்பது தொடர்பாக ஆய்வு செய்து வந்தது. இந்த ஆய்வின் முடிவில் 50 ஆண்டுகளில் ஓசோன் அடுக்கில் ஏற்பட்டிருக்கும் ஓட்டை அடைக்கப்படும் என அறிவித்துள்ளது.
கடந்த 1980 ஆண்டுடன் ஒப்பிடும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் செறிவு 50 சதவீதம் குறைந்துள்ளதால், 2070 ஆம் ஆண்டுக்குள் ஓசோனில் ஏற்பட்டிருக்கும் ஓட்டை மூடப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
இது விஞ்ஞானிகளின் கைகளில் மட்டுமல்ல; நாமும் முயற்சி எடுத்தால் மட்டுமே முடியும்!
இதையும் படிங்க: 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! இனி என்னென்ன மாற்றங்கள் வரலாம்?