பேனா நினைவு சின்னம் அமைக்கும் நிதியில் டெல்டாவில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என தஞ்சாவூர் விவசாயிகள் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 1) ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமையில் தெர்மகோல் பேனாவுடன் வந்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், விவசாயிகள் தெரிவித்திருப்பதாவது:
இதையும் படிங்க: “பொன்முடியின் பேச்சு பாட்டிக்கு செலவு வச்சுடுச்சு” கறார் பாட்டியை கலாய்த்த துரைமுருகன்
டெல்டா மாவட்டத்தில், 2021-22 ஆம் ஆண்டு பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான இன்சூரன்ஸ் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை.
உடனே பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயை வழங்குவதாக அறிவித்து விட்டு, தற்போது வெறும் நுாறு ரூபாய் அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதிக்காக, பேனா நினைவு சின்னம் 80 கோடி ரூபாயில் கட்டுவதால், யாருக்கு என்ன பயன்; அதற்கு பதிலாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்பு கிடங்கு கட்டினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த கோரிக்கைகளுக்கு, அரசு செவி சாய்க்காவிட்டால், கோட்டை முன் உண்ணாவிரதம் இருப்போம்.
இவ்வாறு, விவசாயிகளின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.