சென்னையில் பிரபல திரைப்பட நடிகர் ஆர்.கே.வின் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர் கே என்கிற ராதாகிருஷ்ணன்.இவரது வீடு சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள டிபன்ஸ் காலனி என்ற பகுதியில் பனிரெண்டாவது குறுக்கு தெருவில் அமைந்துள்ளது.
இவருக்கு ராஜி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பங்களாக்கள் அதிகம் இருக்கும் அந்த தெரு என்பதாலும் அடுத்தடுத்து வீடுகள் அதிகம் கிடையாது என்பதாலும்,நடிகர் ஆர் கே வசிக்கும் தெரு எப்போதும் பெரிது மனிதர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும்.
இந்தநிலையில்தான், நேற்று வீட்டில் ஆர்.கே.வின் மனைவியான ராஜி தனியாக இருந்துள்ளார்.அப்போது பின்பக்கமாக திறந்திருந்த கதவு வழியாக உள்ளே நுழைந்த மூன்று மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களை காட்டி அவரை மிரட்டியுள்ளனர். மேலும் அவரைக் கட்டி போட்டுவிட்டு, வீட்டில் இருந்த சுமார் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில்,கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நேபாளிகள் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ‘ எங்க நாட்டுக்கு வாங்க’ – உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை அழைத்த ரஷ்யா