அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரான ஹீராபென் இன்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் இன்று குஜராத் புறப்பட்டார். அதற்கு முன்பு அவர் விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் கூறினார்.
மேலும் அவர், இடையில் பல பிரச்சனைகள் செயற்கையாக உருவாக்கினார்கள் என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை தேர்தல் ஆணையமும் ஏற்று கொண்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி செயற்கையாக சில புதிய பதவிகளை உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
பக்தர்களின் செல்போனை பாதுகாக்க 5 ரூபாய் கட்டணம்- அமைச்சர் சேகர் பாபு