நாட்டிலேயே முதல் முறையாக கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்காக சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒரு பகுதியாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதும், மெட்ரோ ரயில்கள் வெறும் 45 வினாடிகளில் 520 மீட்டர் நீருக்கு அடியில் கடந்து சென்றுவிடும். இந்த கொல்கத்தா சுரங்கப்பாதையானது ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப்பகுதியில் இருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்துள்ளது.
கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்து இருக்கும் சால்ட் லேக் செக்டார் வி பகுதியை ஹௌரா மைதானத்தை ஹூக்ளி ஆற்றைக் கடந்து இணைய திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டது என்றும், வருகிற 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள எஸ்பிளனேடு-சீல்டா இடையேயான வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டால் ரயில் இயக்கம் தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது.
சுரங்கப்பாதைக்குள் ஆற்றுநீர் புகாத வண்ணம், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை; வெளிவந்த அறிவிப்பு…