Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் - அமைச்சர்...

    ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரவை ஆலை முகவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்று உள்ளனர்.

    கூட்டத்தில் பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

    உணவு பாதுகாப்பில் ஏற்கனவே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது என்று கூறிய அவர் சத்துணவு தேவை இருக்கிறது அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும் இந்த ஆண்டு அமைச்சர் சொன்ன இலக்கு 58 ஆயிரம் மெட்ரிக் டன் எனக் கூறிய அவர் 100 கிலோ அரிசியில் ஒரு கிலோ அரசியாக இந்த செறிவூட்டப்பட்ட அரிசி இருக்கும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

    அந்த காலத்தில் மக்கள் எடுத்து கொண்ட கம்பு, கேழ்வரகு அனைத்தும் சத்து நிறைந்தது ஆனால் தற்போது மக்கள் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை விரும்பி உண்ணுவதாகவும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் எந்த அரிசி கொண்டு வந்தாலும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி சேர்த்ததாக இருக்க வேண்டும் எனக் கூறி உள்ளதாக தெரிவித்த அவர் இது குறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்றும் அயோடின் உப்பு சாப்பிட ஆரமித்த உடன் முன் கழுத்து கழலை உள்ளிட்ட குறைபாடு எல்லாம் இப்போது இல்லை என்றும் கூறினார்.

    உணவு திருவிழா போல் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து நடத்த உள்ளோம் என்று கூறிய அவர் கடந்த ஆண்டு 18 லட்சம் நெல் அரவை செய்யப்படாமல் இருந்தது இந்த ஆண்டு அரவை செய்யாத நெல் என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்ததோடு பிப்ரவரி மாதம் அதிக வேலை இருக்கும் அப்பொதும் உங்கள் உதவி வேண்டும் என்று வலியுறுத்திய அவர் உலக அளவில் உக்ரைன் பிரச்சனையால் கோதுமை உற்பத்தி குறைந்து உள்ளதாகவும் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி.

    அரவை ஆலை முகவர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர் கடந்த 18 மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முழுவதுமாக அரைத்து பெரும் சாதனை படைத்துள்ளனர் என்றும் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்றும் கூறினார்.

    ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அது தொடர்பாக இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது, 100 கிலோ சாதாரண அரிசியுடன் ஊட்டச்சத்துகள் கலந்த செறிவூட்டப்பட்ட 1 கிலோ அரிசியை எவ்வாறு கலப்பது என்பது குறித்து முகவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது என்று கூறினார்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பதிவு செய்து 755 அரவை ஆலைகள் உள்ளது. நெல்லை சேமித்து வைக்க குடோன்கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது.

    மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து தமிழக முதலமைச்சர் ஆணைப்படி சரிவூட்டப்பட்ட அரிசியை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இரும்பு சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியது இந்த செறிவூட்டப்பட்ட அரிசி என்று கூறிய அவர் 100 கிலோ அரசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும் என்று கூறினார்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர்.

    தலைமை செயலக கூட்டத்தில் பொங்கலுக்கு என்ன பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

    238 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து செமி குடவுன் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் 7 லட்சத்து 94 ஆயிரம் நெல் சேமித்து வைக்க ஏற்கனவே உள்ள கட்டடம் மூலம் சேமிக்கப்படும் என்றும் கூறினார்.

    அரிசி கடத்தல் தொடர்ந்து நடப்பது குறித்து கேள்விக்கு.

    அரிசி கடத்தலை தடுக்க கூடுதல் எஸ் பி கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வாகனம் செல்லாத 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர் கடந்த காலத்தை விட மூன்று நான்கு மடங்கு அரிசி கடத்தலை தற்போது தடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளை கையாண்டுள்ளார், பொறுப்பேற்ற பின் விளையாட்டு துறைக்கு 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று கூறிய அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் ஜனவரி 12,13,14 அகில இந்திய கபாடி போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் தலை சிறந்த அணிகள் கலந்து கொள்ள உள்ளனர் புரோ கபாடி போட்டியில் கலந்து கொண்டவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றும் ஆண்கள் பிரிவுக்கு முதல் பரிசு 20 லட்சம், இரண்டாம் பரிசு 15 லட்சம், மூன்றாம் பரிசு 7.5 லட்சம் எனவும் பெண்கள் பிரிவுக்கு முதல் பரிசு 15 லட்சம் என்றும் தெரிவித்த அவர் உதயநிதி அமைச்சர் ஆனதில் எந்த அமைச்சருக்கும் மாற்று கருத்து இல்லை என்றும் கூறினார்.

    இந்த வார நாட்கள் உங்களுக்கு ஏற்றமா இறக்கமா? துலாம் முதல் மீனம் வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....