Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படம் குறித்து விக்னேஷ் சிவன் பேச்சு..

    நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படம் குறித்து விக்னேஷ் சிவன் பேச்சு..

    நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் குறித்து அவரின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் கருத்து தெரிவித்துள்ளார். 

    மாயா, கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர், அஸ்வின் சரவணன். இவரின் இயக்கத்தில் வெளிவந்த இரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. 

    இதைத்தொடர்ந்து, அஸ்வின் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், கனெக்ட். இத்திரைப்படத்தை  விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். ஹாரர் வடிவில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 

    மாயா திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அஸ்வின் மற்றும் நயன்தாரா இணைந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. 

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் கனெக்ட் திரைப்படத்தின் டிரெயல்வர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், கனெக்ட் திரைப்படமானது,  95 நிமிட கால அளவைக் கொண்டு இடைவேளை ஏதுமின்றி திரையரங்குகளில் ஒளிபரப்பாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். 

    இந்நிலையில், கனெக்ட் திரைப்படத்தின் பிரத்யேக காட்சி சென்னை தி.நகரில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. இந்தக் காட்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். இந்த காட்சி முடிந்ததும், விக்னேஷ் சிவனிடம் செய்தியாளர்கள் பேசினர். 

    அப்போது, முதல்முறையாக இடைவெளி இல்லாத ஒரு படத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். டிசம்பர் 22-ஆம் தேதி 300 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்றும், திரைப்படம் நல்லபடியாக வரும் என்று நம்புவதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்தார். 

    மேலும், குழந்தைகள் குறித்த கேள்விக்கு, நயன்தாரா குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். 

    கால்பந்து உலகக் கோப்பையால் கூகுள் படைத்த சாதனை.. சுந்தர் பிச்சை சொன்ன ரகசியம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....