என் மகனை விமர்சிப்பதை நிறுத்துங்கள் என எலான் மஸ்க்கின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் விளங்கி வருகிறார். உலக பணக்கார பட்டியலில் தற்சமயம் முதல் இடத்தில் உள்ள இவர் சமீபத்தில் ட்விட்டரை தன்வசப்படுத்தினார்.
எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு சம்பவங்கள் ட்விட்டரில் நிகழ்ந்து வருகின்றன. அவரின் செயல்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமே உள்ளது. ப்ளு டிக், ஆட்குறைப்பு, புதிய விதிமுறைகள் என எலான் மஸ்க் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்.
இந்த அதிரடிகள் பெறும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது. பலர் தொடர்ந்து எலான் மஸ்க்கை விமர்சித்து வருகின்றனர். எலான் மஸ்க்கும் அவ்வபோது தன்னை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவிடுகிறார்.
இந்நிலையில் எலான் மஸ்க்கின் தாயார் மாயே மஸ்க், தன் மகன் ஒரு “மேதை” என்றும், அதனால் அவரை இழிவுபடுத்துவதை நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும், தனது மகனின் மகத்தான வெற்றிகளால் பலர் அவரை வெறுப்பதாகவும், மஸ்க்கைப் பற்றி தவறாக பேசுவதை நிறுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா காலமானார்