ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை 5.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரின் கிழக்கு கத்ரா பகுதியில் இருந்து கிழக்கே 97 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 5.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகி உள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாவில்லை.
முன்னதாக, கடந்த 6-ஆம் தேது துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே உலுக்கியது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுமார் 42,000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தற்போதும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 50,000-த்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்