Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமணிப்பூரில் நிலநடுக்கம்..

    மணிப்பூரில் நிலநடுக்கம்..

    மேகாலயா, மணிப்பூர் மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

    மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. 

    மேலும், இந்த நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை. 

    இதையடுத்து, மேகாலயா மாநிலத்தில் துரா என்ற நகரிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.57 மணிக்கு பூமிக்கு அடியில் 29 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஐசிசி அறிவித்த அணி; இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய வீராங்கனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....