மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீடிக்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் எனவும், 2.67 கோடி பேரில் 2.66 பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை வழிக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பலரும் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காததால், கால அவகாசம் இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.