Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நிறைவு-அமைச்சர் செந்தில் பாலாஜி

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நிறைவு-அமைச்சர் செந்தில் பாலாஜி

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீடிக்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

    அப்போது அவர், இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் எனவும், 2.67 கோடி பேரில் 2.66 பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

    மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை வழிக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. 

    இதையடுத்து, பலரும் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காததால், கால அவகாசம் இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

    மணிப்பூரில் நிலநடுக்கம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....