தீர்க்க சுமங்கலியா இரு..! கல்யாணமான எல்லாப் பெண்களுமே ஆசைப்படக்கூடிய ஆசிர்வாதம் இதுதான் . பெற்றவங்க, பெரியவங்க ஆசிர்வதிச்சா மட்டும் போதுமா? அந்த ஆண்டவனோட ஆசியும் சேர்ந்து கிடைச்சா, தாலிபாக்யம் நிச்சயம் நீடிக்கும் இல்லையா..!? அப்படி இறைவனோட அருள் கிடைச்சு, மாங்கல்ய பலம் பெற எளிய வழியா, பலப்பல மந்திரங்கள் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கு.. அவற்றில் ஒன்றை இத்தொகுப்பில் காண்போம்.
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். சில பெண்களுக்கு ஜாதக ரீதியாக மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க அபிராமி அந்தாதியில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை சொல்லுவதால், அம்பிகையின் அருளால் அவர்கள் நீடித்த சௌபாக்கியத்துடன் இருப்பார்கள்.
மந்திரம்:
“துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொடுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
கனையும் கரும்பும் சிலையும் மென் பாசாங்குசமும் வகையில்
அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே”
பொருள் :அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.
செவ்வாய்க்கிழமை அன்று, அதிகாலையில் எழுந்து நீராடிட்டு, உங்க வீட்டுல இருக்கற அம்மன் படத்துக்கு முன்னால விளக்கேற்றி வையுங்க. சிவப்பு நிறப் பூக்களை அம்மனுக்குப் போடுங்க. மேலயே குறிப்பிட்டுயுள்ள அபிராமி அந்தாதியில் வரும் ஸ்லோகத்தை 11 முறை கூறுங்கள். இதனுடன் சேர்ந்து துர்க்கைத் துதிகளையும் சொல்லுங்கள். புத்தகத்தைப் பார்த்தும் படிக்கலாம்.
அன்றைக்கு ராகு காலத்துல அதாவது மாலை 3 மணியிலேர்ந்து 4.30 மணிக்குள்ள பக்கத்துக் கோயில்ல துர்க்கை சன்னதி முன்னால நெய்தீபம் ஏற்றிவைச்சு வேண்டிக்குங்க. எலுமிச்சை தீபம் ஏற்றும் வழக்கம் இருந்தா அதையும் செய்யலாம். கோயிலுக்குப் போக இயலாதவங்க வீட்டுலயே துர்க்கை அல்லது அம்மன் படம் வைச்சு கும்பிடலாம். அவல், பசும்பால், சர்க்கரைப்பொங்கல்னு முடிஞ்ச நிவேதனம் செய்யுங்க. இப்படிப் பதினொரு வாரம் செய்யறது, கன்னியர்க்கு மாங்கல்யப்பேறும், கல்யாணமானவர்களுக்கு மாங்கல்ய பலமும் தரும் என்பது ஐதீகம்.