தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் 9.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தீபாவளிக்கு எப்போதும் இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் 9.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் கடந்த நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு 9.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 16,888 சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 2.8 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா மாநகரப் பேருந்துகளில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 173 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘இதுதான் குடும்ப படமோ’ – டிரெண்டாகும் வாரிசு படக்குழுவின் ‘போஸ்ட்’…