இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயத்தை தமிழகத்தில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தில் அமையவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேவாங்குகள் மரவகை இனத்தைச் சார்ந்தவைகள். ஆதலால், தங்களின் வாழ்வின் பெரும்பகுதியை மரங்களில்தான் கழிக்கின்றன. மேலும், இந்த தேவாங்குகள் சிறிய பாலூட்டிகளாகும். இப்படியான தேவாங்குகளை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது.
இதையும் படிங்க:கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய கட்டாயம் – தி.மு.க. தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது ?
இதனால், உலக நாடுகள் தேவாங்குகளின் எண்ணிக்கையை பெருக்க வேண்டுமென்றும், அவைகளின் இருப்பை தக்கவைக்க வேண்டுமென்றும் யோசனைகள் செய்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மற்றும் கரூர் பகுதிகளை உள்ளடக்கிய காட்டுப்பகுதியை தேவாங்குகளின் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைத்து தமிழ்நாடு அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.