புதியதாக அமையவுள்ள வழித்தடங்களில் ஓட்டுனர்கள் இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநாகராட்சியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் 55 கி.மீ தூரத்துக்கு தினமும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமல்லாது ,சென்னையின் பல பகுதிகளில் தற்போது புதியதாக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் வருகின்ற 2026-ம் ஆண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதில் வெளிவந்துள்ள தகவலின்படி, சென்னையில் புதியதாக அமையவுள்ள மூன்று வழித்தடங்களிலும் ஓட்டுனர்கள் இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டூவிலரில் உள்ள டிஸ்க் பிரேக்ல ஏன் துளைகள் உள்ளது? பதில்கள் உள்ளே!