ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேர்வு வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது புதிய தேதிகள் அறிவிக்கப்படுள்ளன. இதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுகள் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 20 தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அப்படி நடத்தப்படும் தேர்வுகள் காலை, மதியம் என இரு வேளைகள் நடைபெறும் என்றும் தேர்வு கால அட்டவணை, நுழைவுச் சீட்டு வழங்கும் விவரங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கணினி வழித் தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்காக முயற்சித்து வரும் அனைவரும் இதனைப் பயன்படுத்தி கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் இப்படியொரு வேலையா.. மக்களே ரெடியா?