12 ஆம் வகுப்பு தேர்வு முடித்த மாணவ-மாணவிகளில் எந்தவித உயர்கல்வி படிப்புகளிலும் சேராத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த 79,792 மாணவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா? என பள்ளிக்கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், 8588 மாணவ-மாணவிகள் எந்தவித உயர்க் கல்வியிலும் சேரவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எந்தவித உயர்கல்வி படிப்புகளிலும் சேராத மாணவர்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
பிளஸ் 2 முடித்து 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டம். #TNEducation pic.twitter.com/NBkfO6aWRe
— Sivakumar Ramasamy (@irasivakumar) September 23, 2022
இதையும் படிங்க: நிதி சிக்கல், சம்பள பாக்கி? 41 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றிய தமிழக அரசு!