Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉயர்கல்வி தொடர முடியாத மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

    உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

    12 ஆம் வகுப்பு தேர்வு முடித்த மாணவ-மாணவிகளில் எந்தவித உயர்கல்வி படிப்புகளிலும் சேராத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

    தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த 79,792 மாணவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா? என பள்ளிக்கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், 8588 மாணவ-மாணவிகள் எந்தவித உயர்க் கல்வியிலும் சேரவில்லை என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    எந்தவித உயர்கல்வி படிப்புகளிலும் சேராத மாணவர்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    இதையும் படிங்க: நிதி சிக்கல், சம்பள பாக்கி? 41 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றிய தமிழக அரசு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....