Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா32 வயதுமிக்க பெண்ணை சுட்டுக்கொன்ற மர்மநபர்; தில்லியில் பரபரப்பு

    32 வயதுமிக்க பெண்ணை சுட்டுக்கொன்ற மர்மநபர்; தில்லியில் பரபரப்பு

    தில்லியில் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிய பெண்ணை மர்மநபர் ஒருவர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    தலைநகர் தில்லியில் உள்ள பஸ்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (32). இவர் உத்யோகர் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மாதம்தான் இந்த வேலையில் ஜோதி தினமும் தன் ஸ்கூட்டரிலேயே வேலைக்குச் சென்று திரும்பியுள்ளார். 

    இந்நிலையில், எப்போதும் போல் ஜோதி நேற்று வேலைக்குச் சென்று விட்டு தன் ஸ்கூட்டரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஜோதி பஸ்சிம் விஹார் பகுதிக்கு வந்துக்கொண்டிருந்த நேரத்தில், அவரை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து நிறுத்தியுள்ளார். 

    இதன்பின்னர், அந்த மர்ம நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜோதியை சுட்டுக்கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஜோதி வந்த ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ஜோதி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து கொலை சம்பந்தமாக விசாரணையை மேற்கொண்டும், தப்பிய நபரை தேடியும் வருகின்றனர். 

    தில்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், ஜோதி கொலை சம்பவம் தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சொத்துக்களை பறிக்க அண்ணனை மனநல காப்பகத்தில் சேர்த்த தங்கை; திருப்பூரில் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....