சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா இன்று பொறுப்பெற்றுக் கொண்டதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் .
முனீஸ்வா்நாத் பண்டாரி அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று, பின்னர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார் .
இந்நிலையில் திரு முனீஸ்வா்நாத் பண்டாரி அவர்கள் செப்டம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற்றதையடுத்து , அவரது பொறுப்பிற்கு எம் .துரைசாமி நியமிக்கப்பட்டார் .
இதனையடுத்து கடந்த செப் 13-ஆம் தேதி அன்று உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்றுக் கொண்டதையடுத்து , அவர் நேற்றுடன் (செப் 21) ஓய்வு பெற்றார் .
இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்க புதிய உத்தரவு -பள்ளிக்கல்வித்துறை அதிரடி
இந்நிலையில் எம்.துரைசாமி அவர்கள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து ,ஏற்கனவே சென்னை உயநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் டி.ராஜா, இன்று பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
நீதிபதி டி.ராஜா அவர்கள் , மதுரை மாவட்டம், தேனுார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 1961 மே 25ல் பிறந்த இவர் 1988ல் வழக்கறிஞராக தனது பயணத்தை தொடங்கி ,2008-ஆம் ஆண்டு , தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உயர்வு பெற்றவர் . கடந்த 2009 மார்ச் மாதத்தில் , சென்னை உயநீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின் நிரந்தரம் செய்யப்பட்டு ,தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .