கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அங்கு உள்ள மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்துள்ள கீழ்ராதம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார்.
அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட பிரேம்குமார். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே தெரிவித்தால், அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
இதனால் அந்த சிறுமி மிகுந்த பயத்துடன் இருந்து உள்ளார். இந்த நிலையில், வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோரிடம், தனக்கு நிகழ்ந்த கொடுமையை சிறுமி கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள், உடனடியாக சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் பிரேம்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர். இச்சம்பவம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ளது.
வருகிறது அசானி புயல்: தமிழகத்தில் எங்கெங்கு மழை வெளுத்து வாங்கும்?