ஹரியானா மாநிலத்தில் சமையல் சிலிண்டர் கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபத் மாவட்டம். இம்மாவட்டத்தின் பிச்பாரி கிராமத்தில் அருகில் உள்ள கேம்ப் பகுதியில் பாபு தனது மனைவி மற்றும் தனது நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவரின் வீட்டில் நேற்று
சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் சிலிண்டர் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்ததாகவும், நகரின் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த குடும்பம் மேற்கு வங்கத்திலிருந்து குடிபெயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் சிலர் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சேருவதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் தீயில் எரிந்து சாம்பலாகினர்.
பலியானவர்கள் அப்துல், 45, அவரது 40 வயது மனைவி, 18 மற்றும் 16 வயதுடைய இரு மகள்கள் மற்றும் 12 மற்றும் 10 வயதுடைய இரண்டு மகன்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது, இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை