Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநேற்றைவிட சற்று அதிகரித்த கொரோனா தோற்று :27 பேர் பலி

    நேற்றைவிட சற்று அதிகரித்த கொரோனா தோற்று :27 பேர் பலி

    புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று பாதிப்பு 3,615 ஆக இருந்த நிலையில், இன்று 4,272 ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 4,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகமாகும் .

    இதையும் படிங்க : கியூபாவை புரட்டிப் போட்ட ‘இயன்’ புயல்; ஒட்டு மொத்த நாடே இருளில் மூழ்கிய அதிர்ச்சி சம்பவம்

    இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,83,360 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,611 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,40,13,999 பேர் குணமடைந்துள்ளனர்.

    காலை 9 மணி வரை அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 21,63,248 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, நாடு முழுவதும் இதுவரை 2,18,17,94,748 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....