தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியானது, விஜய் சவுக்கில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வரைச் சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு கொடுக்க இருந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, விஜய் சவுக் பகுதியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக ராகுல் காந்தி உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்களை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று (ஜூலை 26) இரண்டாவது நாளாக சென்றுள்ளார்.
இந்நிலையில், சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பாஜகவால் இந்திய அரசியல் அமைப்புக்கு பெரும் ஆபத்து- தொல்.திருமாவளவன்