Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமின்சார ரயிலில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

    மின்சார ரயிலில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

    சென்னை புறநகர் ரயிலில் குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபரை அருகில் இருந்தவர்கள் வெளுத்து வாங்கினர். 

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் அதீத குடிபோதையில் ஒரு நபரும் ஏறி சென்றார். அப்போது அங்குள்ள ஒரு பெண்ணிடம் அவர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். 

    இதற்கு அந்தப் பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதை பொருட்படுத்தாத போதையில் இருந்த அந்த நபர், அந்தப்பெண்ணை கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார். 

    இதனைப் பார்த்த அருகில் இருந்த சக பயணிகள், அந்த நபரை தடுத்து நிறுத்தினர். இதன் பிறகும் அந்த நபர் சும்மா இல்லாமல் தவறாக நடக்க முயற்சி செய்யவே அங்குள்ள பயணிகள் போதையில் இருந்த அவரை அடி வெளுத்து வாங்கினர். 

    இதையடுத்து அடுத்த ரயில் நிறுத்தத்தில் காவல்துறையிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அந்த நபர் வட இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும், குடி போதையின் காரணமாக அவர் ஏதேதோ உளறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

    மேலும் காவல்துறையினர் அந்த நபரை வீடியோ எடுக்க முயன்றபோது, ஆபாசமாக நின்று போஸ் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6 அடுக்குகளில் பார்க்கிங் வசதி; கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....