Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்ட புகைப்படம்; விவரங்களை தேடும் நெட்டிசன்கள்

    ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்ட புகைப்படம்; விவரங்களை தேடும் நெட்டிசன்கள்

    ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாவதோடு, அந்தப் புகைப்படம் குறித்த விவரங்களை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். 

    உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்பவர், ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில் இவர் இசையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. பாடல்களும், பின்னணி இசைகளும் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

    இந்நிலையில், மகள்கள் கதீஜா மற்றும் ரஹிமா ஆகிய இருவரும் விலையுயர்ந்த காரை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த எலக்ட்ரிக் காரின் முன்னால் நின்று போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை அவர்களது தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். 

    இவர் பகிர்ந்த இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தில் உள்ள காரைப் பற்றி நெட்டிசன்கள் விவரங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். 

     

    View this post on Instagram

     

    A post shared by ARR (@arrahman)

    இந்த புகைப்படத்தில் இருக்கும் கார் போர்ஷே ரக கார் ஆகும். இந்த போர்ஷே கார் நிறுவனம் முதன் முதலில் 2019-இல் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியது. மேலும், இந்தக் காரின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; கைப்பற்றிய நியூசிலாந்து..மழையால் ஸ்தம்பித்த ஆட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....