Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரியில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

    புதுச்சேரியில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

    புதுச்சேரியில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

    இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். கட்சியின் தேசிய செயலாளர் அஜீஸ்பாஷா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் அபிஷேகம், தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாநில தகுதி வழங்காத பா.ஜனதா கூட்டணியிலிருந்து முதலமைச்சர் ரங்கசாமி வெளியேற வேண்டும்.

    புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கையை வென்றெ டுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து நடவடிக்கைக்கு வலு சேர்க்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் முடிவு எடுக்க வேண்டும். மின்விநியோகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

    அரசு தனியார்மய ஏற்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருவதை மாநிலக்குழு கண்டிக்கிறது.இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
    கூட்டுறவு சங்கங்கள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட குழுவால் நடத்தப்பட வேண்டும். எனவே சட்ட விதிகளின்படி கூட்டுறவு சங்கங்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....