Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிமெரினாவில் நடைபெற்ற பேஷன் ஷோ; ஆச்சர்யப்பட்ட மக்கள்!

    மெரினாவில் நடைபெற்ற பேஷன் ஷோ; ஆச்சர்யப்பட்ட மக்கள்!

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பாண்டி மெரினாவில் நடைபெற்ற பேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொதுவாகவே, விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுப்பது நிகழும். அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையிலும், உள்ளூர் பேஷன் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பாண்டி மெரினா கடற்கரை பூங்காவில், கிறிஸ்துமஸ் என்ற தலைப்பில் தனியார் அமைப்பின் சார்பில் பேஷன் ஷோ நடைபெற்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா உடையிலும், கிறிஸ்துமஸ் பரிசு பெட்டகங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் போல் உடையணிந்தும் ரேம்ப்வாக் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை கண்டு ரசித்ததோடு, தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

    தோழியை அடிவாங்க விடமால் தடுக்கும் செல்ல நாய்! வைரல் காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....