Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்கர்ப்பினி மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்; முதலமைச்சர் ரங்கசாமி

    கர்ப்பினி மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்; முதலமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரியில் கர்ப்பினி மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்குவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா வாழுதாவூர் சாலை சொக்கநாதன்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை இயக்குநர் பத்மாவதி வரவேற்றார். என்ஆர் காங். எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சமூக நலத்துறை செயலர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ம் ஆண்டுக்கான மாநில விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், சில நேரங்களில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் இதுபோன்று இல்லாமல், முதியோருக்கு உரிய நேரத்தில் உதவித்தொகை வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

    மேலும் மற்றவர்களுக்கு வழங்கும் உதவித்தொகை விட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் உதவித்தொகை வழங்குவதற்கு ஆணை இருப்பதாக கூறியுள்ளீர்கள். அப்படி இருந்தால், நிச்சயமாக மாற்றத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் உதவித்தொகை உயர்த்த வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று சிறப்பான திட்டங்கள் இருந்தால், அதையும் புதுவை அரசு செயல்படுத்தும் என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்ற குறை இருக்கிறது. யுடிசி பணிக்கு ஆட்கள் எடுக்கும்போது, அதில் 4 சதவீதம் வழங்க வாய்ப்பு இருந்தால் கொடுக்கலாம். ஆனால், ஒருசில துறையில் 10க்கும் குறைவான பணியிடங்கள் எடுக்கும்போது, அப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று இடங்களை கொடுக்க முடியாத நிலை உள்ளது. அதிகமான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு கொடுக்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை அரசு நிச்சயமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

    உங்களுடைய (மாற்றுத்திறனாளிகள்) தன்னம்பிக்கையை நான் எப்போதும் பாராட்டுவேன் என்று கூறிய அவர், கர்ப்பினி பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். அதை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....