வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் படப்படிப்பின்போது சண்டை பயிற்சி கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வடசென்னை, அசுரன் திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம், விடுதலை. இத்திரைப்படத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். விஜய்சேதுபதி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சூரிக்கு நாயகியாக பவானி ஶ்ரீ நடிக்கிறார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் ‘விடுதலை’ திரைப்படமானது உருவாகி வருகிறது. இரு பாகங்களாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. வெளிவந்த நாள் தொட்டே சினிமா ரசிகர்கள் விடுதலை அப்டேட்களுக்காக காத்திருக்க தொடங்கினர்.
விடுதலை திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. இத்திரைப்படத்தில் ஒரு ரயில் விபத்து காட்சி திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 8 கோடி வரையில் அந்த ரயில் விபத்து காட்சிக்கு செலவாகும் எனவும் அண்மையில் செய்திகள் வெளிவந்து சமூகவலைதளத்தில் பேசு பொருளாகின.
சமீபத்தில், ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்படிப்புகள் சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்று வந்தது. குறிப்பாக சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை பயிற்சி கலைஞர் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இச்சம்பவம் சினிமா வட்டாரம் மட்டுமின்றி பொதுமக்களிடையேவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘நான் நேற்று பலரை பயமுறுத்தி விட்டேன்’ – நெஞ்சுவலி குறித்து மனம்திறந்த பாண்டிங்