சென்னை, ராமாபுரத்தில் 5 குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், கம்பர் சாலை பகுதியில் இருக்கும் ஒரு குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைத்தொடர்ந்து, தீப்பிடித்த வீட்டிற்கு அருகில் இருந்த பிற குடிசை வீடுகளுக்கும் எளிதாக தீப்பற்ற ஆரம்பித்தது.
தீப்பற்றிய உடனே அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே, வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும், தண்ணீர் அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்து, பிறகு முழுமையாக அணைத்தனர். 5 வீடுகளில் இருந்த அனைத்தும் பொருள்களும் எரிந்து நாசமானது. வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்திலும் தீ பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் வீட்டில் இருந்த 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் போலி மதுபானம் தயாரிப்பவர்கள் மீது நீதி விசாரணை வேண்டும்; அதிமுக அன்பழகன்