Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுடிச்சவனுக்கு மட்டும்தா அபராதமா என்ன? குடிகாட்டியும் போடுவோம்ல..!

    குடிச்சவனுக்கு மட்டும்தா அபராதமா என்ன? குடிகாட்டியும் போடுவோம்ல..!

    இனி ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், உடன் பயணிக்கும் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து விதிகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போக்குவரத்து விதிகள் அதிகமாக மீறப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது சென்னை சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

    அதன்படி, இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடிந்திருந்தது, அவருடன் பயணிக்கும் நபர் குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுனருக்கு அபராதம் விதிப்பது போல், அவர் மீதும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. 

    சவாரி செல்லும் ஆட்டோ, டாக்ஸியில் இந்த விதிமுறை அமலாகாது என்பது குறிப்பிடத்தக்கது .ஓட்டுநருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத தொகை மாற்றங்கள் அக்டோபர் 26 முதல் அமலுக்கு வர உள்ளது.

    இதையும் படிங்க: ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை-பாமக தலைவர் கருத்து

    புதிதாக மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள்:

    • சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்.
    • ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
    • சாலையில் வாகன பந்தயம், சாகசங்களில் ஈடுபட்டால் இனி ரூ.5000ற்கு பதில் ரூ.10,000 அபராதம்.
    • லைசென்ஸ் இல்லையென்றால் முன்பு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி ரூ.5000 அபராதமாக விதிக்கப்படும்.
    • ஹெல்மேட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.100க்கு பதில் ரூ.1000 அபராதம்.
    • செல்போன் பேசிக்கொண்டோ, அதிவேகமாகவோ வாகனம் ஓட்டினால் இனி ரூ.1000க்கு பதில் ரூ.10,000 அபராதம்.
    • சோதனையின் போது ஓட்டுநர் உரிமத்தை தர இயலாவிட்டால் இனி ரூ.500க்கு பதில் ரூ.1500 அபராதம்.
    • பதிவு செய்யப்படாத வாகனத்தை இயக்கினால் ரூ.2500க்கு பதில் ரூ.5000 அபராதம்.
    • தேவையில்லாமல் ஹாரன் ஒலி எழுப்புவோர், புகையை அதிக அளவில் வெளியிடும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம்.
    • காப்பீடு செய்யாத வாகனத்தை இயக்கினால் இனி ரூ.2,000க்கு பதில் ரூ.4000 அபராதம்
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....