Friday, March 15, 2024
மேலும்
    Homeவானிலைசிட்ரங் புயல் தனது வழியை மாற்றியது...வெளிவந்த அதிரடி தகவல்!

    சிட்ரங் புயல் தனது வழியை மாற்றியது…வெளிவந்த அதிரடி தகவல்!

    வங்கக் கடலில் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள சிட்ரங் புயலானது மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

    தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது.

    இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22-ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என்றும், அதன்பிறகு வடக்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 24-ம் தேதி புயல் சின்னமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து., இந்த சிட்ரங் புயல் மெதுவாக வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து, ஒடிசை கடற்கரையில் இல்லாமல் மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை; சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....