மாண்டஸ் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அந்தவகையில் தென் சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டு, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு செல்லும்போது, சென்னை மேயர் பிரியாவும், ஆணையர் ககன் தீப் சிங் பேடியும் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விட்டு காசிமேடு துறைமுகம் வந்தார். அவர் வருவதற்கு முன்பாக மேயர் பிரியாவும் ஆணையர் ககன் தீப் சிங் பேடியும் அங்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
அவர்களின் வாகனம் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், முதல்வரின் கார் துறைமுகத்திற்கு உள்ளே வர தொடங்கியதை தெரிந்துகொண்ட இருவரும் நடக்கத் தொடங்கியதாகவும், அப்போது முதல்வரின் வாகனம் வேகமாக செல்லத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதைக்கண்ட மேயரும் ஆணையரும் முதல்வரின் கான்வாயில் ஏறி தொங்கிய நிலையில் பயணம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
Cm கான்வாய் வாகனத்தில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் வாகனத்தில் தொங்கிக்கொண்டு புயலினால் பாதிப்படைந்த பகுதிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர் 😂@mkstalin @BJP4TamilNadu @ADMKofficial @chennaicorp @chennaipolice_ pic.twitter.com/P2zBE3qDgF
— TAMIL ARASAN (@TAMILAR37973811) December 10, 2022