இன்று நடைபெற்ற புரோ கபடி போட்டியில் யு மும்பா, ஹரியானா மற்றும் பாட்னா அணிகள் வெற்றிப்பெற்றன.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புரோ கபடி போட்டியின் இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் மற்றும் யு மும்பா, பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் களம் கண்டன.
தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளை மட்டுமே பெற்றது. அதே சமயம், ஹரியானா ஸ்டீலர்ஸ் 61 புள்ளிகளை பெற்றது. இதன்மூலம், 61-38 என்ற கணக்கில் ஹரியானா அணி இந்த ஆட்டத்தில் வெற்றிப்பெற்றது.
பெங்களூரு புல்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதிய ஆட்டத்தில் புள்ளிகள் அதிகளவில் வராமல் இருந்தாலும், ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் 36-30 என்ற கணக்கில் யு மும்பா அணி பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.
இதையடுத்து, பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் இடையே நடைபற்ற ஆட்டத்தில், 49 – 38 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் வெற்றிப் பெற்றது.
மேலும், வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி எலிமினேட்டர் சுற்றுகள் நடைபெறவுள்ளன. இதில், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. அதேபோல, தமிழ் தலைவாஸ் உ.பி. யோதாஸ் அணியை எதிர்கொள்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம்; புயலால் சேதம்..