வங்கக் கடலில் வருகிற டிசம்பர் 13 ஆம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் டிசம்பர் 13 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து 9 கி.மீ. வேகத்தில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது.
கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்