பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
3 நாள் பயணமாக கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு சென்ற ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“இலங்கைக்கு நாம் மிகவும் ஆதரவாக இருந்து வருகிறோம். அந்நாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம். இலங்கை மக்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக உள்ளோம். இப்போது, அவர்கள் சொந்த பிரச்சனைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள்.
ஆகையால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இல்லை.”
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சமீபத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகப் போவதாக தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13-ம் தேதி பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வந்தது. இந்நிலையில், இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக இலங்கையின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் இடைக்கால அரசு- எதிர்கட்சிகள் முடிவு