Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையில் இடைக்கால அரசு- எதிர்கட்சிகள் முடிவு

    இலங்கையில் இடைக்கால அரசு- எதிர்கட்சிகள் முடிவு

    இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை விரைவில் அமைக்க பிரதான எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளது. 

    இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்கு வசிக்கும் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

    இதனால், இலங்கையில் ஆளும் அரசை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். கடந்த 9-ம் தேதியன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது. 

    இப்போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். கோத்தபய ராஜபக்கசேவும் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 

    இச்சூழலில், கோத்தபய ராஜபக்கசே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய அதே நாளில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும், இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். 

    இதனையடுத்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகப் போவதாக தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த 9-ம் தேதி அன்று அறிவித்தார். 

    அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு  அவைத்தலைவர் தெரிவித்தார். இதனையடுத்து, கோத்தபய ராஜபக்சே ஜூலை 13-ம் தேதி பதவி விலகவுள்ளதாக தெரிவித்தார்.

    ஜூலை 13-ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய பிறகு அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. 

    இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று  மீண்டும் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். 

    அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே தற்போது வரை எங்கிருக்கிறார் என்ற தகவல்கள் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....