Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஅதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜிநாமா?

    அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜிநாமா?

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், இலங்கை மக்கள் ஆளும் அரசை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மக்களின் போராட்டத்தின் விளைவாகவே, இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இலங்கை பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    இருப்பினும், ஆளும் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து வலுத்து வந்தது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென அந்நாட்டு மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். 

    இந்நிலையில், கடந்த 9-ம் தேதி கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. இதற்கிடையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 

    இதனிடையில், அதே நாளில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

    இதனையடுத்து, அன்று மாலை 6 மணியளவில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகப் போவதாக தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13-ம் தேதி பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வந்தது. இந்நிலையில், இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து  அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக இலங்கையின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்த கட்ட நகர்வு குறித்து இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இலங்கையில் இடைக்கால அரசு- எதிர்கட்சிகள் முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....