ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் இன்று நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படும் கலாசார திருவிழாக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. இப்படியான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், தற்போது பீட்டா, கூபா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென்றும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் காளைகள் உள்ளன என்றும் கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவானது கடந்த 24-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதைக் கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை 29-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்கள்.
இந்நிலையில், 29-ஆம் தேதியாகிய இன்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் நடைபெறவுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்; மும்மொழிகளில் ஒரு படம்…