Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபராமரிப்பு பணியால் சென்னை-கோவை இடையே 6 ரயில்கள் ரத்து

    பராமரிப்பு பணியால் சென்னை-கோவை இடையே 6 ரயில்கள் ரத்து

    பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை-கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

    சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) 1, 2-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

    சேலம்-எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1, 2, 3-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

    சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

    எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

    எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள்; உச்சநீதிமன்றத்தில் விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....